×

தாய், மகன் மீது தாக்குதல்

குஜிலியம்பாறை, ஜன. 22: குஜிலியம்பாறையை சேர்ந்தவர் மாரியம்மாள் (81). அதே ஊரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (65). இவர்களுக்கு நிலப்பிரச்னை தொடர்பாக இருதரப்புக்கும் ஏற்கனவே முன்விராதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜன. 15ம் தேதியன்று ராமமூர்த்தி மகன்கள் தர்மராஜ் (40), பொன்ராமன் (37), அசோக் (32) ஆகியோர் வீட்டில் இருந்த மாரியம்மாள், அவரது மகன் தம்பி முத்து (56) ஆகியோரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து மாரியம்மாள் அளித்த புகாரில் குஜிலியம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு