×

பிராதுகாரன்பட்டியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

தேனி, ஜன. 22: ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலைகுடிநீர் தொட்டி இருப்பதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமலாபுரம் ஊராட்சியில் பிராதுகாரன்பட்டி உள்ளது. இக்கிராமத்தில் கடந்த 2013-2014ம் ஆண்டில் ஆர்பிஎம்ஆர்எஸ் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கடடப்பட்டது.இந்த குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளே ஆன நிலையில், மேல்நிலைத்தொட்டியின் அடிப்பாகம் முழுமையாக சிதிலமடைந்து விட்டது. இதனால் மேல்நிலைத் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேல்நிலைத் தொட்டி இடிந்து விழுந்து உயிர்பலி ஏற்படும் முன்னர் இத்தொட்டியை இடித்துவிட்டு புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?