×

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை, ஜன. 22:  சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் முன்பு வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் மூலம் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழா 2ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது.

பேரணியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட அட்டைகள் ஏந்தி செல்லப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், துணை பொது மேலாளர் நளன்கிள்ளி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மஞ்சுளா பாலசுந்தர், வட்டாரப் போக்குவரத்துக் கழக ஆய்வாளர் பிரபாகரன், சிவகங்கை தாசில்தார் மைலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா