உளுந்தூர்பேட்டை, ஜன. 22: உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டார். அப்போது கூவாகம் கிராமத்தில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த பழனிவேல்(43) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.