×

காவல்துறை மைதானத்தை சீரமைக்கும் பணி மும்முரம்

விழுப்புரம், ஜன. 22: குடியரசு தினவிழாவையொட்டி விழுப்புரத்தில் காவல்துறை மைதானத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. நாட்டின்  70வது குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  விழுப்புரம் மாவட்டத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை மைதானத்தில்  ஆட்சியர் அண்ணாதுரை தேசியக்கொடியை ஏற்றிவைத்து காவல்துறை, தீயணைப்பு,  ஊர்க்காவல்படை, தேசிய மாணவர்கள் படை, என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை  கவுரவித்து, வருவாய்த்துறை, வேளாண்துறை, தாட்கோ,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு  துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். மேலும் குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை  நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. குடியரசுதினவிழாவையொட்டி விழுப்புரம்  காவல்துறை மைதானத்தை சீரமைக்கும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது. மைதானத்தில் உள்ள புற்கள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tags : Police Ground ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை