உளுந்தூர்பேட்டை, ஜன. 22: உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எறஞ்சி என்ற இடத்தில் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்து அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வந்த 22 பேர் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இதில் அரசு பேருந்தில் வந்த அறந்தாங்கி அருகே வெட்டார்பேட்டையை சேர்ந்த மோகன்ராம்(50) என்பவர் நேற்று தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். அரசு பேருந்து மற்றும் கார் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.