×

மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

களக்காடு, ஜன.22:  திருக்குறுங்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் தளவாய்புரம் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு புதரில் சாக்கு பையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் மகன் முத்துக்குமார் என்ற சில்பா குமாரை(39) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மது பாட்டில்களும் ரூ 150ம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : liquor bartender ,
× RELATED மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது