×

காட்பாடியில் டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து 50 சவரன் திருடியவர்களை பிடிக்க 6 தனிப்படை

வேலூர், ஜன.22: காட்பாடி டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன், ₹3 லட்சம் திருடியவர்களை பிடிக்க 6 தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் டாக்டர் ரமணய்யா(45). இவர் கடந்த 19ம் தேதி காலை சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அன்றிரவு 11.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 50 சவரன் நகைகள், ₹3 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். இதுகுறித்து டாக்டர் ரமணய்யா காட்பாடி போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘டாக்டர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக 6 தனிப்படையினர் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்த வழக்குகளை பட்டியலிட்டுள்ளோம். போதிய துப்பு கிடைத்தவுடன் குற்றவாளிகளை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, பழைய குற்றவாளிகளின் பட்டியலும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது’ என்றனர்.

Tags : Indians ,robbers ,
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...