×

செம்மிபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருப்பூர், ஜன.22:பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்மிபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. செம்மிபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வரும் நிதியாண்டில் கிராம வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. பல்வேறு திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் நடைபெற்றன. மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடம் கூறுகையில், செம்மிபாளையம் பகுதியில் இருந்து வேறுசில பகுதிகளுக்கு குடிநீர் எடுக்கப்படுவதாக கூறுவது வதந்தி, இது போன்ற திட்டம் ஏதும் கிடையாது, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Special Gram Sabha Meeting ,
× RELATED சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்