×

மூதாட்டி மாயம்

ஈரோடு, ஜன.22: ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் 6வது வீதியைச் சேர்ந்தவர் வெள்ளக்கவுண்டர். இவரது மனைவி பூஞ்சோலை (80). கணவர் இறந்துவிட்டதால் பூஞ்சோலை தனது நெருங்கிய உறவினரான சிவராஜ் என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பூஞ்சோலை, நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அவரது உறவினர்கள் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பூஞ்சோலையை தேடி வருகின்றனர்.

Tags : elder ,
× RELATED நடுநெற்றிப் பௌர்ணமி-3