×

யானை தாக்கி விவசாயி காயம்

சத்தியமங்கலம், ஜன.22: தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி காயம் அடைந்தார். தாளவாடி அருகே உள்ள அஞ்செட்டிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வீரேந்திரன்(48). இவர், தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். கடந்த வாரம் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள கதிர்களில் இருந்து தானியம் பிரித்தெடுக்கப்பட்டு தனது நிலத்தில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரேந்திரன், நேற்றுமுன்தினம் மக்காசோளத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தனது நிலத்தில் அமைக்கப்பட்ட குடியில் காவல் இருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒற்றை யானையை பார்த்து அதிர்ச்சியடைந்த வீரேந்திரன், யானையை விரட்ட முயன்றார். அப்போது அந்த யானை, வீரேந்திரனை துரத்தி தாக்கியதில் கீழே விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் அந்த யானை அங்கிருந்து சென்றதால் உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தனர் வீரேந்திரனை மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதுகுறித்து ஜீரஹள்ளி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : elephant attack ,
× RELATED யானை தாக்கி பெண் பலி விவகாரம்; பாஜக...