×

தந்தையை திட்டிய மகன் கைது

கிருஷ்ணகிரி, ஜன.22: சாமல்பட்டி அடுத்த கெரிகேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சென்னப்பநாயக்கர்(80). விவசாயி. இவரது மகன் திம்மராயன்(45). கூலி தொழிலாளி. திம்மராயனுக்கும், சென்னப்பநாயக்கருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். இதனால் திம்மராயன், சென்னப்பநாயக்கரை தகாத வார்த்தைகளால் திட்டி வந்தார். இதேபோல், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த திம்மராயன், சென்னப்பநாயக்கரை  ஆபாசமாக திட்டியுள்ளார். இதுகுறித்து சென்னப்ப நாயக்கர் சாமல்பட்டி போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீஸ் எஸ்எஸ்ஐ செல்வம் வழக்கு பதிவு செய்து, திம்மராயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா