×

பாலக்கோடு அருகே வங்கி மேலாளருக்கு கொலை மிரட்டல்

பாலக்கோடு, ஜன.22: பாலக்கோடு அருகே வங்கி மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது செய்யப்பட்டார். பாலக்கோடு அருகே கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால்(45). விடுதலைச் சிறுத்தை கட்சி வணிகர் அணி மாநில துணை பொதுச்செயலாளரான இவர், மாரண்ட அள்ளி இந்தியன் வங்கியில் வீடு கட்டுவதற்க்கு ₹30 லட்சம் கடனாக பெற்றார். ஆனால், கடனை முழுமையாக திருப்பி செலுத்தாத நிலையில் வங்கி மேலாளர் புவனேஸ்வரி(43) கடந்த 6ம் தேதி அவரது வீட்டிற்க்கு ஜப்தி நோட்டீஸ் ஓட்ட சென்றார். அப்போது ராஜகோபாலுக்கும், மேலாளருக்கும் தகராறு ஏற்பட்டது. '[lஅதில் பெண் மேலாளரை ஆபாசமாகவும், தகாத வார்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து ஜப்தி நோட்டீசை கிழித்து எறிந்துள்ளார். இதையடுத்து, கடந்த 6ம் தேதி பஞ்சப்பள்ளி போலீசில் மேலாளர் புவனேஸ்வரி புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ராஜகோபால் தலைமை மறைவானது தெரிய வந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜகோபாலை நேற்று பஞ்சப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

Tags : Murder ,bank manager ,Palakkad ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்