×

வேளாண் அதிகாரி தகவல் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும் மாவட்ட குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜன.22: விவசாய ெதாழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும் என திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்டக் குழு கூட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். எதிர்கால வேலை குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் ராஜா, நேதாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யபட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசு மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த மத்திய சட்டம் கொண்டு வர வேண்டும. நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.500 வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒய்வுதியமாக ரூ. 3000 வழங்க வேண்டும். நிலம், குடிமனை, வீடு என்ற பிரதான கோரிக்கை முன்வைத்து மார்ச் 20 ல் டெல்லி பாராளுமன்ற முன் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு திருவாரூர் மாவட்டத்திலிருந்து 500 பேர் பங்கேற்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Tags : District Committee Meeting ,
× RELATED ஏஐடியுசி மாவட்டக்குழு கூட்டம்