×

கந்தர்வகோட்டை அருகே சாலை விபத்தில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் படுகாயம்

கந்தர்வகோட்டை, ஜன.22: கந்தர்வகோட்டை அருகே புனல் குளத்தில் நடைபெற்ற சாலைவிபத்தில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரின் கால் முறிந்தது. கந்தர்வகோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தற்போது புனல்குளம் துணை மின்நிலையத்திற்கு கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் சென்றபோது, புதுக்கோட்டை நோக்கி வந்த கார் மோதியதில் ராஜ்குமார் வலது கனுகால் முறிந்தது. உடனே அவரை அருகிலிருந்தவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை எஸ்.ஐ பாஸ்கர் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த தஞ்சையை சேர்ந்த ஷேக் அலாவுதீன் மகன் சலீம்(31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Electricity Board ,assistant activist ,road accident ,Gandharvagoda ,
× RELATED தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள...