×

பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை

பெரம்பலூர்,ஜன.22: பெரம்பலூரில் வருகிற 26ம்தேதி நாட்டின் 71வது குடியரசு தினவிழா. 150மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதையொட்டி ஆயுதப்படை அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. குடியரசு தினவிழா வருகிற 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 26ம்தேதி நடைபெறும் 71வது குடியரசு தின விழாவில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் முன்னிலையில், கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி, தியாகிகளை கவுரவித்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளார்.

\பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரு க்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய பிறகு, பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், ஆயுதப்படையை சேர்ந்த 1 இன்ஸ்பெ க்டர், 3 சப்.இன்ஸ்பெக்டர்கள், 3 கமாண்டர்கள் மற்றும் தலா 21பேர் என 63பேர்கள் கொண்ட 3 பிளட்டோன் போலீசார், ஊர்க்காவல் படை யினர் என மொத்தம் 100 பேர்களின் கொடிஅணிவகுப்பு மரியாதையை கலெ க்டர் பார்வையிடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அனைத் துத் துறை அதிகாரிகள் மு ன்னின்று செய்து வருகின்றனர். விழாவையொட்டி நடக்கவுள்ள போலீசாரின் அணிவகுப்புக்கான ஒத்திகை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

Tags : Republic Day Parade Rehearsal ,Perambalur Armed Forces ,
× RELATED திண்டுக்கல்லில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை