×

அரசு கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

பெரம்பலூர்,ஜன.22: வேப்பந்தட்டை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை, அறி வியல் கல்லூரியில் நேரு யுவகே ந்திரா அமைப்பும் சிறுசிலா கிராம அப்துல்கலாம் இ ளைஞர் நற்பணி மன்றமும் இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கினை நடத்தியது. கல்லூரியின் கலைய ரங்கில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் நேருயுவகே ந்திரா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சம்பத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, மாணவர்கள் தங்களுடைய ஆளுமையை வளர்த்து கொள்ள வேண்டும். எதிர் காலங்களில் வெற்றிபெறு வதற்கான தகுதிகளை வளர்த்து கொள்வதற்கு விடா முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொ ண்டார். வேப்பந்தட்டை ஒன்றிய வட் டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலர் முரளித ரன், பெரம்பலூர் மாவட்டத் தூய்மைஇந்தியா திட்ட ஒரு ங்கிணைப்பாளர் ராஜாபூ பதி, குரும்பலூர் பல்நோக் குப் பயிற்சியாளர் வைர மணி, வேப்பந்தட்டை அரசு கலை,அறிவியல் கல்லூரி யின் கணினி அறிவியல் துறைத்தலைவர் ராமராஜ், பெரம்பலூர் முன்னாள் ரா ணுவ அதிகாரி சதானந்தம் ஆகியோர் கலந்துகொண் டு வாழ்த்துரை வழங்கினர்.

Tags : Government College ,
× RELATED தந்தை பெரியார் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை முப்பெரும் விழா