×

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

ஜெயங்கொண்டம்,ஜன.22: ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தத்தனூர் குடிகாட்டை சேர்ந்த செல்முத்து(60), செவ்வந்தி (41) ஆகியோர் அப்பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 2பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது