×

10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எழுதவேண்டும்

அரியலூர்,ஜன.22: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும் என அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிக்காட்டுதல் நிகழ்ச்சி கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிக்காட்டி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கி கலெக்டர் பேசியதாவது, தமிழக அளவில் நமது அரியலூர் மாவட்டம் நடந்து முடிந்த மார்ச் 2019 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.71 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 11ம் இடத்தை பெற்றது. இதில் 10,454 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதி, 10,110 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றார்கள். இந்த வருடம் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த கல்வியாண்டில் வருகின்ற மார்ச் 2020 நமது மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 10,527 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 8495 மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, 10ம் வகுப்பு மாணவர்கள் வருகின்ற மார்ச் 2020 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காமராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் அம்பிகாபதி, சுந்தர்ராஜ், பாலசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் குணசேகரன், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...