×

கீழ்வேளூர் அருகே கடுவையாற்றின் குறுக்கே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

கீழ்வேளூர், ஜன.22:கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 3 மாதமாக தண்ணீர் வீணாகி வருகிறது. நாகை மாவட்டம் திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பெரிய ராட்சத சிமெண்ட் குழாய் பூமிக்கடியில் புதைக்கப்பட்டும், ஆறு, வாய்க்கால் பகுதியில் இரும்பு குழாய் அமைக்கப்பட்டும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்களில் இருந்து பிற இடங்களுக்கு பெரிய கீழ் தொட்டியில் சேமிக்கப்பட்டு அங்கிருந்து மோட்டார் மூலம் கிராமங்களில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நீர் எடுத்து வர மோட்டர் மூலம் நீரை அதிக அழுத்தத்தில் தள்ளப்படுகிறது. இதனால் பெரிய குழாயில் தண்ணீர் வேகமாக செல்லும். இதனால் குடிநீர் குழாயில் சிறிய ஓட்டை ஏற்பட்டால் அதிகளவில் தண்ணீர் வெளியேறி வீணாகும்.

இந்நிலையில் கீழ்வேளூரை அடுத்த தேவூர் கடுவையாற்றின் குறுக்கே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் செல்ல தனியாக பாலம் அமைத்து அதற்குமேல் பெரிய இரும்பு குழாய் அமைக்கப்பட்டு, இதன்மூலம் தண்ணீர் செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் வீணாகி வருகிறது. அதே இடத்தின் அருகே தரையில் இரும்பு குழாயில் ஓட்டை ஏற்பட்டு அதிலும் அதிக அளவில் குடிநீர் வழிந்தோடுகிறது. கடந்த 3 மாதத்திற்கு மேலாக தேவூர் கடுவையாற்றில் இரண்டு இடங்களில் பெரிய இரும்பு குழாய் ஓட்டையால் வெளியேரும் தண்ணீர் ஆற்று தண்ணீரில் கலந்து விணாகி வருகிறது. மேலும் இரண்டு இடங்களில் வீணாகும் தண்ணீர் 5 ஊராட்சிகளுக்கு தேவையான தண்ணீர் அளவு வீணாகி வருகிறது.

தற்போது குழாயில் ஏற்பட்ட வெடிப்பு அதிக அழுத்தத்தில் செல்லும் தண்ணீரால் நாளுக்கு நாள் குழாயின் வெடிப்பு அதிகரித்து குடிநீர் விணாகி வருகிறது. இதனால் சாட்டியக்குடி, திருக்குவளை, எட்டுக்குடி, தலைஞாயிறு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. உடன் குடிநீர் வடிகால் வாரியத்தினர் தேவூர் கடுவையாற்றின் குறுக்கே செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட இரும்பு குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு மற்றும் இணைப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள சசிவை சீரமைத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Breakdown ,Coalition Joint Drinking Water Pipe ,Keezhveloor ,Kaduvayar ,
× RELATED ‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவு காதலர்களின் தற்காலிக பிரிவு’