×

மதுபோதைக்கு அடிமையான ஐடிஐ மாணவர் தற்கொலை வீட்டில் பணம் திருடி குடித்ததால் விரக்தி

மயிலாடுதுறை, ஜன.22: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் ரமேஷ் என்பவரின் மகன் சந்தோஷ்(16). இவர் மயிலாடுதுறை நகரில் உள்ள தனியார் ஐடிஐயில் தொழிற் பயிற்சி படித்து வந்தார். அடிக்கடி நண்பர்களுடன் சென்று மதுஅருந்துவது வாடிக்கை. வீட்டிலிருந்து பணத்தை திருடி குடித்து வந்துள்ளார், இதைக்கண்டு அவரது தந்தை ரமேஷ், ஏன் இப்படி திருடிபோய் குடிக்கிறாய் என்று கண்டித்துள்ளார். இதனால் மனம் வெறுத்துப்போன சந்தோஷ் வீட்டில் தந்தையின் சட்டை பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்துச் சென்று நேற்று முன்தினம் குடித்துவிட்டு செம்பனார்கோவில் அருகில் உள்ள மருதூர் ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கெலை செய்து கொண்டார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : student ,ITI ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...