×

கரூர் கோயம்பள்ளியில் பராமரிப்பின்றி முட்செடிகள் மண்டிய சுகாதார வளாகம்

கரூர். ஜன. 22: கரூர் அருகே உள்ள கோயம்பள்ளியில் பெண்கள் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை. இதனால் ஏராளமானமுட்செடிகள் படர்ந்து கிடக்கின்றன. நீண்டகாலமாக சுத்தப்படுத்தவில்லை என்பதால் துர் நாற்றம் வீசி வருகிறது. கழிவறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சுகாதார வளாகத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Coimbatore ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம்