×

மானூர் அருகே பைக் விபத்தில் இருவர் காயம்

மானூர், ஜன. 21: மானூர் அருகே வாகைக்குளம் ஊராட்சி பாலஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் அம்பேல்ராஜா (39). இவர், நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாத உறவினரான ரோகித் (20) என்பவரை மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்து சென்றார். இவர்களுடன் இதே ஊரை சேர்ந்த அனந்தகிருஷ்ணனும் சென்றுள்ளார். வாகைக்குளம் கூட்டுறவு வங்கி அருகே வரும்போது எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது ேமாதியது. இதில் அனந்தகிருஷ்ணன், ரோகித் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக இருவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து அம்பேல்ராஜா கொடுத் புகாரின் பேரில் மானூர் எஸ்ஐ கணேஷ்குமார் வழக்கு பதிந்து ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கார் டிரைவர் கல்யாணிகுமார் (50) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : bike accident ,Manoor ,
× RELATED மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்