×

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


திருச்சுழி, ஜன. 21: திருச்சுழி அருகே, மின்சாரம் தாக்கியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (27). இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வீட்டில் அழகர்சாமி உள்ளிட்ட 5 பேர், கடந்த இரண்டு நாட்களாக டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை வீட்டில் உள்ள அறையில் மின்விளக்கை போடுவதற்காக அழகர்சாமி சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா