மதுரை, ஜன.21: மதுரை வாழைத்தோப்பு சிந்தாமணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (72). இவர் குருவிக்காரன் சாலையில் டூவீலரில் வந்தபோது, அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த ஆரோக்கியசாமியை, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.