×

புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் முகாம் 250 மனுக்கள் குவிந்தது

புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 250 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், ஆலங்குடி வட்டம், குழந்தை விநாயகர் கோட்டை கிராமத்தை சேர்ந்த கிராம உதவியாளர் காமாட்சிக்கு, கிராம நிர்வாக அலுவலராகப் பதவி உயர்வு வழங்கும் ஆணையை கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கினார்.  கூட்டத்தில், டிஆர்ஓ சரவணன், ஆர்டிஓ தண்டாயுதபாணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pudukkottai ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...