×

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழா

புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று நடந்தது. சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை நகராட்சி பொது அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நேற்று ஹெல்மெட் பயன்பாடு குறித்து வாகன மகளிர் பேரணி நடந்தது.

இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விளக்கினார். பேரணியில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தை வந்தடைந்தது. விழாவில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கேவன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் போலீசார் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Pudukkottai ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...