×

மன்னார்குடி சர்வ சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மன்னார்குடி, ஜன. 21: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பைபாஸ் சாலை புதிய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் உள்ள சர்வ சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடை பெற்றது. இதனையொட்டி கடந்த 3 தினங்கள் விநாயகர் கோயிலில் யாக சாலை பூஜை நடைபெற்றது. யாக சாலையில் புனித நீர் அடங்கிய கடம் வைத்து ஹோமம் வளர்க்கப்பட்டது. இதில் 81 கலச பூஜை, கஜபூஜை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் செய்து அதன் நிறைவாக பூர்ணாஹூதி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்று, தீபஆராதனை செய்யப் பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப் பட்டது. பின்னர் புனித நீர் கொண்டு வந்து சர்வ சித்தி விநாயகருக்கு அபிசேகம் செய்தனர். அதனை தொடர்ந்து கோவிலில் விசேச தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு வான வேடிக்கைகளுடன் சர்வ சித்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப் பட்டது.

Tags : Mannargudi Sarva Siddhi Vinayaka Temple ,
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...