×

விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் உண்ணாவிரதம்

அரியலூர்,ஜன.21: திருமானூர் அருகே விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் அனைவரும் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(45). விவசாயி. இவர், வயலில் விளைந்த காய்கறிகளை தனது இரு சக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு, அதே கிராமத்தை சேர்ந்த இளங்கோவன்(47) என்பவரை அழைத்துக்கொண்டு திருவையாறு மார்க்கெட்டுக்கு கடந்த 1ம் தேதி அதிகாலை சென்ற போது, திருமானூர் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சக்திவேல் அதேயிடத்தில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த இளங்கோவன் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பொங்கல் அன்று உயிரிழந்தார்.இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த சக்திவேலின் மனைவி சங்கீதா குந்தபுரத்திலுள்ள தங்கள் வீட்டின் அருகே மகன் லோகேந்திரன், மகள் அபியுடன் அமர்ந்து தனது கணவர் சக்திவேல் உயிரிழப்புக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த அரியலூர் டிஎஸ்பி திருமேனி, கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டனர்.

Tags : family members ,accident survivor ,
× RELATED நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா...