×

திருவண்ணாமலையில் பரிதாபம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக டிரைவர் ரயிலில் சிக்கி பலி

திருவண்ணாமலை, ஜன.21: திருவண்ணாமலையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக  கார் டிரைவர் ரயிலில் அடிபட்டு இறந்தார். திருவண்ணாமலை தீபம் நகரில் வசித்தவர் சரவணன்(38). இவர் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள ரயில்வே கேட் அருகே அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது நேற்று காலை கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்த விழுப்புரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சரவணனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேறு ஊருக்கு மாறுதல் உத்தரவு வந்ததாகவும், இதனால் மனமுடைந்த சரவணன் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த ரயிலில் பாய்ந்து உயிரிழந்தாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இறந்த சரவணனுக்கு சுதா(35) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...