×

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

செங்கல்பட்டு, ஜன. 21: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 200 மனுக்களை பெற்றார். தொடர்ந்து, வடகிழக்கு பருவ மழையின்போது வீடுகளை இழந்த 2 பேர், மாடுகளை இழந்த 2 விவசாயிகள் ஆகியோருக்கு அரசு நிவாரண நிதியை  கலெக்டர் வழங்கினார். இதில்  மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, நேர்முக உதவியாளர் விஜயலட்சுமி, ஆர்டிஓக்கள் செங்கல்பட்டு செல்வம், மதுராந்தகம் லட்சுமிபிரியா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Overnight Meeting ,Chengalpattu District People ,
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...