காஞ்சிபுரம். ஜன.21: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பொன்னையா கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 பேருக்கு முதியோர் உதவித் தொகை, ஒரு மாற்றுத் திறனாளிக்கு மருத்துவ சான்றுடைய அடையாள அட்டை ஆகியவை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.