×

திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் மர்மச்சாவு: ஆர்டிஒ விசாரணை

செய்யூர்,  ஜன.21: செய்யூர் அடுத்த கண்ணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (22). விவசாயி. இவருக்கும் திருக்கழுக்குன்றம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி (18) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மோகன் வீட்டின் அருகில் விவசாய நிலத்தில் அமைந்துள்ள கிணற்றில், உமாமகேஸ்வரி சடலமாக மிதந்தார்.தகவலறிந்து செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருமணமாகி ஒரு ஆண்டு ஆவதால், செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம். உமாமகேஸ்வரி வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் தீவிரமாக விசாரிக்கிறார்.

Tags : Adolescent Marmachau ,investigation ,RTO ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு