×

சேற்றில் சிக்கி வாலிபர் சாவு

புழல், ஜன. 21: வில்லிவாக்கம் அடுத்த ராஜமங்கலம், ராஜாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (20). இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 7 பேருடன் சோழவரம் ஏரியில் குளித்துள்ளனர். எதிர்பாராமல் சேற்றில் சிக்கிய ஜெகதீஷ் நீரில்மூழ்கினார். தகவலறிந்ததும் சோழவரம் போலீசாரும், செங்குன்றம் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.  சேற்றுக்குள் சிக்கிய ஜெகதீஷை காப்பாற்ற படகில் சென்று தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு வரை  அவரை கண்டுபிடிக்க முடியாததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. நேற்று நேற்று மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கியது. சேற்றில் சிக்கிய இருந்த ஜெகதீஷை சடலமாக தீயணைப்பு படையினர் மீட்டனர். சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...