×

முன்விரோத தகராறில் பழிக்குப்பழி ஆட்டோவில் கடத்தி ரவுடி வெட்டி கொலை

 கல்குட்டையில் உடல் வீச்சு
n 3 பேர் கைது

சென்னை, ஜன. 21:  முன்விரோத தகராறில்  ஆட்டோவில் ரவுடியை கடத்தி வெட்டி கொலை செய்து, சடலத்தை கல்குட்டையில் வீசிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவல்லிக்கேணி பி.பி.குளம் 2வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (24). ரவுடியான இவர் மீது, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ் காவல்நிலையங்களில் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. ராம்குமார், ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் நடேசன் சாலையில் டீக்கடை ஒன்றின் முன்பு நண்பர்களுடன் ராம்குமார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 ஆட்டோக்களில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் ராம்குமாரை பிடித்து ஆட்ேடாவில் கடத்தி சென்றனர். பின்னர் நடுக்குப்பம் 5வது தெருவில் உள்ள பொது கழிவறைக்குள் அழைத்து சென்று ராம்குமாரை கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் ராம்குமார் உதவி கேட்டு அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் கழிவறை நோக்கி ஓடிவந்தனர். அப்போது மர்ம நபர்கள் கையில் ஆயுதங்கள் வைத்திருந்ததால் யாரும் ராம்குமாரை மீட்க முன் வரவில்ைல.

தொடர்ந்து பொதுமக்கள் சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். ஐஸ்அவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் தாங்கள் வந்த ஆட்டோவிலேயே ராம்குமாரை ரத்தம் சொட்ட சொட்ட தூக்கிப் போட்டு கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.  பின்னர் சம்பவம் குறித்து, ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் ராம்குமாரின் தந்தை குருமூர்த்தி அளித்த புகாரின்படி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 8வது தெருவை சேர்ந்த அப்பு (24), பிரேம்குமார் (25), ஆட்டோ டிரைவர் சிவமணி (24), அப்துல் ரஹிம் (24), அஸ்மத் (23), சுபான் (22), கார்த்திக் (25), ரஞ்சித் (22), வினோத் (24), ஜெகன் (29), அருண் (30) ஆகிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே ராம்குமார் கடத்திய ஆட்டோ பதிவெண்ணை வைத்து திருவல்லிக்கேணி பி.எம்.தர்கா பகுதியை ேசர்ந்த ஆட்டோ டிரைவர் அருண், ஜெகன், அப்பு ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோவளம் கடலோர காவல்படை காவல் நிலையம் பின்புறம் உள்ள கல்குட்டையில் வெட்டு காயங்களுடன் கிடந்த வாலிபர் சடலத்தை கேளம்பாக்கம் போலீசார் மீட்டனர். பின்னர் ஐஸ்அவுஸ் பகுதியில் கடத்தப்பட்ட ராம்குமார் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்த போது சடலமாக கிடந்தது ராம்குமார் என உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: பொங்கல் பண்டிகையான 15ம் தேதி இரவு 11.30 மணிக்கு குடிபோதையில் நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம்குமாருக்கும், கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்போது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை ராம்குமார் உடைத்து பிரேம்குமாரை கொலை செய்யும் நோக்கில் அவரது கழுத்தில் பலமாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த பிரேம்குமார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறகு பிரேம்குமார் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் ராம்குமார் மீது புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இதற்கிடையே மயிலாப்பூர் நடேசன் சாலையில் டீக்கடை ஒன்றில் ராம்குமார் இருப்பதாக நண்பர்கள் மூலம் பிரேம்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ராம்குமார் டீக்கடை அருகே இருந்ததால் பிரேம்குமார் தனது நண்பர்கள் உதவியுடன் ஆட்டோவில் கடத்தினார். தன்னை பாட்டிலால் குத்திய இடத்திற்கே ராம்குமாரை அழைத்து சென்று கழிவறையில் வைத்து சரமாரியாக வெட்டி 11 பேரும் கொலை செய்துவிட்டு, 5வது தெருவிலேயே உடலை வீசிவிட்டு சென்றனர். பின்னர் மீண்டும் ஆத்திரம் அடங்காத  பிரேம்குமார், மீண்டும் ராம்குமாரின் உடலை ஆட்டோவில் கடத்திச் சென்று  கோவளம் அருகே உள்ள கல்குட்டையில் வீசிட்டு 8 நண்பர்களுடன் தலைமறைவாகிவிட்டார். பிறகு ஒன்றும் தெரியாதபடி ஆட்டோ டிரைவர் அருண், ஜெகன், அப்பு ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Rowdy ,death ,
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...