குன்னூர், ஜன.21:குன்னூர் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், மணிவண்ணன், நஸீர் ஆகியோர் கடைகளில் சோதனை நடத்தினர். அதில் உரிமையாளர்கள் ரகசியமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. பட்டாசு கடை உரிமையாளர் பாலசுப்ரமணியம், பெட்டிக்கடை உரிமையாளர் மாறன், மன்சூர் அலி, மகேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் 50க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.