×

குடந்தையில் 2 வியாபாரிகளை தாக்கி வழிப்பறி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

கும்பகோணம், ஜன. 21: குடந்தையில் 2 வியாபாரிகளை தாக்கி முகமூடி கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தால் குடந்தை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் அடுத்த சுவாமிமலை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முகமது சலீம் (52), காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 5 மணிக்கு தாராசுரம் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க மொபட்டில் சென்றார். அப்போது வழியில் ஒரு பைககில் வந்த 3 பேர், மொபட்டை நிறுத்தி வியாபாரி முகமது சலீமை தாக்கி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கும்பகோணம் அடுத்த திம்மக்குடியை சேர்ந்த சங்கர் (42) என்பவர் மீன் வாங்க குடந்தை நோக்கி வந்தார். அவரையும் மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கி அவரிடமிருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்து கொண்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர். இருசம்பங்களிலும் 3 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது. ஒரே பைக்கில் இவர்கள் வந்து உள்ளனர். இரண்டு சம்பவங்களின்போதும் பைக்கில் வந்த 3 பேரும் பனிக்குல்லாவை முகமூடி போல அணிந்து வந்துள்ளனர். எனவே இரண்டு இடங்களிலும் கைவரிசை காட்டியவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் என தெரியவந்துள்ளது. இந்த வழிப்பறி குறித்து குடந்தை தாலுகா போலீசார் மற்றும் குடந்தை கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் மர்மநபர்கள் தாக்கியதில் காயமடைந்த முகமது சலீம், சங்கர் ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : robbers ,
× RELATED பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது