×

திருக்கடையூரில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு நினைவஞ்சலி

தரங்கம்பாடி, ஜன.21: திருக்கடையூரில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. திருக்கடையூர் அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் 19.01.1982ம் ஆண்டில் நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் அஞ்சான், நாகூரான் ஆகியோர் உயிரிழந்தனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான அஞ்சான் மற்றும் நாகூரான் ஆகிய இருவருக்கும் 38ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் திருமெய்ஞானம் கிராமத்தில் உள்ள அவர்களது நினைவிடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நாகை மாலி, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், அகில இந்திய விவசாய தொழிலளார் சங்க மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம், தரங்கம்பாடி வட்ட செயலாளர் சீனிவாசன், விதொச மாவட்ட செயலாளர் ஸ்டாலின், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், சிஐடியூ மாவட்ட செயலளர் சீனி.மணி, மாதர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கலைச்செல்வி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிங்காரவேலன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையங்கள் வைத்தும், மலர் தூவிம் அஞ்சலி செலுத்தினர்.

Tags : martyrs ,firing ,
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...