×

பைக் தீவைத்து எரிப்பு ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

கீழ்வேளூர், ஜன.21:கீழ்வேளூரை அடுத்த கிள்ளுக்குடியை சேர்ந்த பத்மநாதன் மகன் சுரேஷ் (31). பொக்லைன் ஆப்ரேட்டரான இவருக்கு அதிக மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் சுரேஷுக்கு மன உலைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூரேஷ் வேளாங்கண்ணி செல்வதற்காக இரவு நேரத்தில் பைக்கில் சென்றார். அப்போது புத்தூர் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், பைக்கை நிறுத்தி விட்டு ரயில் பாதை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது காரைக்காலில் இருந்து சென்னை சென்ற கம்பன் ரயில் முன் சுரேஷ் திடீரென பாய்ந்ததார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலனஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி சுரேஷ் இறந்தார். ரயில்வே கேட்டில் ஏராளமானவாகள் நின்று கொண்டிருந்தவர்கள் கண் எதிரே வாலிபர் ரயில் முன் பாய்ந்தது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நாகை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்