×

கொலை குற்றவாளியின் வீடு சூறை

மயிலாடுதுறை, ஜன.21: மயிலாடுதுறையில் கொலை குற்றவாளின் வீட்டை சூறையாடிவிட்டு, பைக்கை தீவைத்து எரித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் மூக்கையன் மகன் மணிகண்டன்(26). இவர் பன்றி வளர்த்து அவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். தொழில் போட்டி காரணமாக கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்ற நபரை ஓடஓடவிரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில் மணிகண்டன், அவரது உறவினர்கள் முனுசாமி, வீரையன், ரெங்கசாமி, பெரியண்ணன், ராஜா ஆகியோர் உள்ளனர். அந்த வழக்கு இதுவரை முடியவில்லை. இதற்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவை தொழில்போட்டி காரணமாக நாகையில் ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

இதற்கிடையே ஒரே குழுவினருக்கும் போட்டி முற்றி வந்ததால் கடந்த 18ம் தேதி இரவு 10 மணிக்கு மயிலாடுதுறை சீனிவாசபுரம் ரத்தினம் நகரில் மணிகண்டனை முனுசாமி, வீரையன், ரெங்கசாமி, பெரியண்ணன் ஆகியோர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டனது உடலை அடக்கம் செய்துவிட்டு வந்த மணிகண்டனது ஆதரவாளர்கள் 4 பேர் வரதாச்சாரியார் தெருவில் உள்ள முனுசாமி வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து வாசலில் நின்றிருந்த முனுசாமியின் பைக்கை எரித்துவிட்டு ஓடிவிட்டனர், இதுகுறித்து முனுசாமியின் மனைவி சுந்தரி(30) அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது