×

நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம் 191 மனுக்கள் குவிந்தது

நாகை, ஜன.21: நாகையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 191 மனுக்கள் பெறப்பட்டது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர குறைதீர் கூட்டம் மற்றும் பொது மக்கள் குறைதீர் கூட்டம் டிஆர்ஓ இந்துமதி தலைமையில் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் வங்கிக் கடன், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 9 மனுக்களும், மக்கள் குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 182 மனுக்கள் என மொத்தம் 191 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள டிஆர்ஓ சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது