×

கரூர் புது தெருவில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், ஜன. 21: கரூர் புதுத்தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் ரயில்நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் புதுதெரு வழியாக சர்ச் கார்னர் மற்றும் ஜவகர்பஜார் வருகின்றன. இந்த தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் வரைமுறையின்றி வருவதால் பின்னால் வரும் வாகனங்கள் போக முடியாமல் தவிக்கின்றன. காலை மாலை நேரங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்களும் நெரிசலில் சிக்கி விடுகின்றன. ரயிலை பிடிப்பதற்காக அவசரமாக ரயில்நிலையத்திற்கு வாகனங்களில் செல்பவர்களும் போக்குவரத்து பிரச்னையால் தாமதமாக செல்ல நேரிடுகிறது. எனவே இந்த தெருவில் போக்குவரத்தினை முறைப்படுத்தி நெரிசலைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,Karur New Street ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...