×

சாலையோரத்தில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கரூர், ஜன. 21: குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் குப்பைகள் மலைபோல குவிந்துள்ளது. கரூர் ஆண்டாங்கோயில்ரோடு பகுதி விரிவாக்கப் பகுதியாக உள்ளது. ஏராளமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள பகுதி. இங்கு போதுமான அளவில் குப்பை தொட்டிகள் இல்லை. குப்பை மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மேலும் ஒதுப்புறமாக சீத்தை முட்களை அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர்.

இதனால் சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை மண்டலம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பிரச்னை ஏற்பட்டு காற்று மாசு ஏற்படுகிறது. போதுமான அளவுக்கு குப்பை தொட்டிகளை வைப்பதுடன் உடனுக்குடன் அகற்ற வேண்டும். முட்களையும், குப்பைகளையும் எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு