×

கன்னியாகுமரி முதல் சென்னை வரை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து இளம்பெண் பைக் பேரணி

கன்னியாகுமரி, ஜன. 21: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்து பரிமாற்றம், மற்றும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து சென்னையை சேர்ந்த ராஜலெட்சுமி மந்தர் (35) என்ற பெண் நேற்று காலை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து சென்னை வரையிலான பைக் பேரணியை தொடங்கினார். பேரணியை மாநில நிர்வாகி பாலகணபதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட பாஜ தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ், பாஜ நிர்வாகிகள் கன்னியாகுமரி சுபாஷ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் முத்துராமன், தேவ், ராஜன், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் வழியாக செல்லும் இந்த பேரணி சென்னையில் நிறைவடைகிறது.

Tags : bike bike rally ,Kanyakumari ,Chennai ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...