×

இரணியல் அருகே மின்சாரம் தாக்கி எல்க்ட்ரீஷியன் பலி

திங்கள்சந்தை, ஜன. 21: இரணியல் அருகே பரசேரி பகுதியை சேர்ந்தவர் முருகன். எலக்ட்ரீஷியன். நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது முருகன் வீட்டை பூட்டிவிட்டு கிரைண்டர் ஒன்றை பழுது பார்த்து ெகாண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் இறந்தார்.

மாலையில் அவரது தந்தை வந்து பார்த்தபோது, வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் எந்தவித சலனமும் இல்லை. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் துணையுடன் கதவை உடைத்து பார்த்தபோது, உள்ளே முருகன் இறந்த நிலையில் காணப்பட்டார். சம்பவம் குறித்து முருகனின் மனைவி சுஜாதா இரணியல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Electrician ,Eraniel ,
× RELATED எடப்பாடி பொய் பிரசாரம் 24 மணி நேரம்...