×

உர தொழிற்சாலையில் பாய்லரில் இருந்து வெந்நீர் கொட்டி இன்ஜினியர் பலி தென்தாமரைகுளம் அருகே பரிதாபம்

தென்தாமரைகுளம், ஜன. 21:  சாமிதோப்பு அருகே சாஸ்தான்கோவில் விளையைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன்(55). இவரது மகன் தினேஷ்பாபு(27). இன்ஜினியரிங் பட்டதாரி. திருமணமாகவில்லை.  இவர் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள உரத் தொழிற்சாலையினில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று தினேஷ்பாபு பணியில் இருக்கும் போது பாய்லர் பக்கத்தில்  நின்று கொண்டிருந்தார். அப்போது பாய்லரில்  இருந்த கொதிக்கும் தண்ணீர் திடீரென்று தினேஷ்பாபுவின் மீது  கொட்டியது. இதில் வலிதாங்க முடியாமல் துடிதுடித்த தினேஷ்பாபுவை சக தொழிலார்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தினேஷ்பாபு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு தினேஷ்பாபு பரிதாபமாக இறந்தார். தென்தாமரைகுளம் போலீசார்  தினேஷ் பாபுவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இன்ஜினியரிங் பட்டதாரி கொதிக்கும் தண்ணீர் கொட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Engineer ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...