குற்றம் சாட்டப்பட்டுள்ள தவுபீக், அப்துல் சமீம் ஆகியோருக்கு ஆதரவாக மதுரையில் இருந்து வக்கீல்கள் ஆஜர் ஆனார்கள். மதுரை ஐகோர்ட் வழக்கறிஞர் ராஜா உள்பட 4 பேர் ஆஜர் ஆகி இருந்தனர். ராஜா வாதாடுகையில், கைதாகி உள்ளவர்களை போலீஸ் காவலில் ஒப்படைத்தால் பாதுகாப்பு இல்லை. சமூக வலைதளங்களில் இவர்களை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 28 நாட்கள் கேட்பது போலீசார் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.