×

ரயிலில் தவற விட்ட பை மீட்டு பயணியிடம் ஒப்படைப்பு

ஈரோடு, ஜன. 20:  திருப்பூர் - காங்கயம் ரோடு சத்யா நகரை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் (35). இவர் பாலக்காட்டிற்கு சென்று விட்டு, பின்னர் மீண்டும் அவரது குடும்பத்தினருடன் பாலக்காடு பாசஞ்சர் ரயிலில் நேற்று முன்தினம் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தார். ரயில் திருப்பூர் வந்ததும் அப்துல் ரஹ்மான் அவர் கொண்டு வந்த பையை மறந்து விட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றவுடன் அவர் பையை தவறவிட்டது அறிந்து, ரயில்வே ஸ்டேஷன் வந்தார். ஆனால், ரயில் புறப்பட்டு ஈரோடு நோக்கி சென்றது. இதைத்தொடர்ந்து அப்துல் ரஹ்மான் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் அப்துல் ரஹ்மான் பயணித்த பெட்டியில் அவர் தவற விட்ட பை இருப்பதை உறுதி செய்து, மீட்டு, அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பையில், அரை பவுன் மோதிரம், ரூ.1,000 பணம் இருந்தது.  ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அப்துல் ரஹ்மான் பையை பெற்றுக்கொண்டார்.

Tags : passenger ,
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...