×

சரக்கு ஆட்டோ டிரைவர் மாயம்

ஈரோடு, ஜன. 20: ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்த நாகராஜ் மகன் குப்புராஜ் (29). சரக்கு ஆட்டோ ஓட்டுநர். திருமணம் ஆகாதவர். குப்புராஜின் திருமணத்திற்காக அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். கடந்த 14ம் தேதி சென்றார். ஆனால், பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து கோபால் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் குப்புராஜ் கிடைக்காததால், அவரது பெற்றோர் நேற்று ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து குப்புராஜை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா