தொண்டாமுத்தூர், ஜன.20: கோவை அருகே தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொண்டாமுத்தூர் வட்டார தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் மரம் நடும்விழா நடந்தது. வட்டாரத் தலைவர் கே.ஆர்.செல்வம் தலைமையில் வகித்தார். செயலாளர் டி.குமார் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகசுந்தரம்
அரசு டாக்டர்கள் தேவசேனா, கணேசன், தலைமை செவிலியர் ஹேமா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைததனர். வட்டார நிர்வாகிகள் ஆறுச்சாமி, கிருஷ்ணசாமி பார்த்திபன், மூர்த்தி, பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், கருணாகரன், கிருஷ்ணன், மு.ப.நடராசன், டாக்டர் சிவகுமார், மனோன்மணி, ராமாத்தாள், சைனி சிவகுமார், கிருஷ்ணசாமி, முனியப்பன் தருண், தேவராஜ், சந்திரன், பாஸ் என்ற பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.